மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா வரவேற்றார். இதில், ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன், மதுராந்தகம் ஆர்டிஓ சரஸ்வதி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் மருத்துவ முகாமை பார்வையிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார்.