நாசரேத்: நாலுமாவடியில் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை திறப்பு விழா, நாளை மறுநாள் (7ம் ேததி) நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா, நாலுமாவடி- நாசரேத் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மருத்துவமனை வளாகத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.