மயிலாடுதுறை: மதுபோதை தலைக்கேறி, மகனை பீர் பாட்டிலால் கிழித்த கணவனை, மனைவியே அரிவாளால் வெட்டி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் மயிலாடுதுறையில் அரங்கேறியுள்ளது. மணல்மேடு அடுத்த கொற்கை கிராமத்தை சேர்ந்த மகாதேவன், மதுபோதையில் அவரது மனைவி அமுதாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த மகாதேவன், 3 மாதங்களுக்கு முன்பு அடித்து துன்புறுத்தி மனைவியின் வலது கையை உடைத்துள்ளார். வழக்கம் போல் நேற்றிரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த மகாதேவன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.