கொழும்பு: இலங்கை எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே, திடீரென அவையை விட்டு வெளியேறினார். இலங்கையின் நாடாளுமன்ற கூட்டத்தின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக கோஷங்களையும், பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். அப்போது ‘கோ ஹோம் கோத்தபய’ என்ற கோஷத்துடன் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அதனால் அவை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். அதன்பின் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்ற அவையை விட்டு வெளியேறிச் சென்றார்.