விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல பெரும்பாலும் அரசு பேருந்துகளை நம்பி உள்ளனர். அப்படி செல்லும் மாணவர்கள் தினந்தோறும் பேருந்து படியில் தொங்கியபடி செல்கின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்ரீநாதா அறிவுறுத்தலின் பேரில் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குமரராஜா தலைமையில் நேற்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.