புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் கால்நடைகளை விட்டு அவற்றை விவசாயிகள் மேயவிடுவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் செட்டியாபட்டி, கீரமங்கலம், மாண்டங்குடி, திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க வகையில் மலர்சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் கடந்த 10 நாட்களாக பூக்களுக்கு விலை கிடைப்பது இல்லை. குறிப்பாக அதிகம் விளையும் சென்டி பூக்கள் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரையே விற்பனையாகிறது.