திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 10 லட்சம் டன் நெல்கொள்முதல் செய்த மாவட்ட நிர்வாகம், நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு நன்றி தெரிவித்து,பட்டாசு வெடித்து அதிகாரிக்கு வேல் வழங்கி மகிழ்ந்தனர். அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம், ஜனவரி 10 முதல் ஜூலை 4ம் தேதி வரை 20 லட்சம் மூட்டைகளுக்கு மேல் லாபகரமான விற்பனையில் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி 10 லட்சம் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக விவசாயிகளுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் கிடைத்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.