ராமநாதபுரம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் இருந்து 2 குழந்தைகள் உட்பட மேலும் 8 பேர் தமிழ்நாட்டிற்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் இலங்கை தமிழர்கள் வாழ வழியின்றி தொடர்ச்சியாக படகு மூலம் தமிழகம் வருவது அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே இலங்கையில் இருந்து வந்த 28 குடும்பத்தினர் சேர்ந்த 105 இலங்கை தமிழர்கள் அகதிகளாக அங்கிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்தநிலையில், அவர்களிட உரிய விசாரணை நடத்திய பின், மண்டபம் அகதி முகாமில் பதிவு செய்து, தங்கவைக்கப்பட்டுள்ளனர்.