டோல்கேட்டை அகற்றகோரி உண்ணாவிரதம் இருந்த மாஜி அமைச்சர் கைது

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள  டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான  உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் நேற்று திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தகவலறிந்த திருமங்கலம் போலீசார் சென்று அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். அவர்கள் ஏற்காததால் முன்னாள் அமைச்சர் உதயகுமார், எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்ட அதிமுகவினரை கைது செய்தனர்.

Related Stories: