பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை நாளை 3 சாட்சிகள் ஆஜராக உத்தரவு

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தமிழக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் தொடரப்பட்ட வழக்கு விசாரணை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கிறது. நேற்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நடந்த விசாரணைக்கு சிறப்பு டிஜிபி, எஸ்பி ஆஜராகவில்லை. அரசுதரப்பு சாட்சிகளும் ஆஜராகாத நிலையில், நாளைக்கு (6ம் தேதி) விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, அரசுதரப்பு சாட்சிகளான ஐஏஎஸ் அதிகாரி, அப்போதைய திருத்தணி இன்ஸ்பெக்டர் சுரேஷ், பெரம்பலூர் போலீஸ் டேவிட் ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Related Stories: