கொழும்பு: 5 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க கடந்த 1ம் தேதி சென்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இந்திய கடல் எல்லையில் 12 பேரும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த 12 மீனவர்களை சிறைபிடித்து கைது செய்தனர். மேலும் மீனவர்களின் விசைப்படகை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் மேலும் 5 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.