வால்பாறை: வால்பாறை அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் உணவு கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த காட்டு யானைகள், கட்டிடங்களை உடைத்து சேதப்படுத்தியது. கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்து உள்ளது பெரியார்நகர். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. நேற்று அதிகாலை 1 மணி அளவில் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து 8 யானைகள் வெளியேறி இந்த பள்ளி பகுதிக்கு வந்தன. அந்த யானைகள் பள்ளி வளாகத்தில் உலா வந்து முற்றுகையிட்டு உணவு தேடின.