திருமங்கலம்: திருமங்கலம் கப்பலூரில் அமைந்துள்ள டோல்கேட்டினை அகற்ற வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் உண்ணாவிரதம் இருந்த அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் திருமங்கலம் நகர் பகுதி வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது உள்ளூர் வாகனங்களும் கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.