பெங்களூரு: கர்நாடகாவில் காவல் உதவி ஆய்வாளர் பணி நியமனத்தில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏடிஜிபி அம்ரீத் பால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிகளுக்காக தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான நிலையில் இந்த தேர்வை எழுதிய பெரும்பாலானோர் இந்த தேர்வில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது வரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.