தோகைமலை : தோகைமலை பகுதிகளில் சில தினங்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் விவசாய நிலங்கள் மற்றும் தரிசுகளில் புற்கள் வளர்ந்துள்ளதால் கால்நடைகள் கூட்டம், கூட்டமாக மேய்ந்துவருகிறது.கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டு கால்நடைகளுக்கு தீவனங்கள் இல்லாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள் பராமரித்து வந்த கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைக்காத சூழல் தொடர்கதையாக இருந்து வந்தது. இந்நிலையில் கால்நடைத் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டநிலையில், விலை ஏற்றத்தால் விவசாயிகள் தங்கள் வளர்த்து வந்த கால்நடைகளை பராமரிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.