தஞ்சாவூர் அருகே புதுப்பட்டி பகுதியில் உளுந்து காயவைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

வல்லம் : தஞ்சாவூர் அருகே புதுப்பட்டி பகுதியில் விவசாயிகள் கோடை உழவாக உளுந்து சாகுபடி செய்திருந்தனர். தற்போது அதை அறுவடை செய்து காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். வழக்கத்தை விட முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கோடை உழவாக தஞ்சை அருகே புதுப்பட்டி பகுதியில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. பம்ப் செட் தண்ணீரை கொண்ட இந்த உளுந்து பயறு சாகுடி மேற்கொள்ளப்பட்டது புரதச்சத்து மிகுந்த உளுந்து, குறுகிய காலத்தில், மிகக்குறைந்த செலவில் விவசாயிகளுக்கு அதிக லாபத்தை அளிக்கும் பயிராக உள்ளது. விதைப்பு செய்த 65 முதல் 75 நாட்களுக்குள் செடிகளில் உள்ள காய்கள் நன்கு முற்றி காய்ந்தவுடன் அறுவடை செய்யப்படும்.

அந்த வகையில் தஞ்சாவூர் அருகே புதுப்பட்டி பகுதியில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்திருந்த உளுந்தை அறுவடை செய்து வருகின்றனர். இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட உளுந்து செடிகளை சாலைகளில் காயவைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. சாகுபடி செலவுகளை விட கூடுதல் லாபமும் கிடைக்கும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சரியான முறையில் சாகுபடியை மேற்கொண்டால் லாபம் கிடைக்கும். அதிபட்சம் 80 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விடலாம். தற்போது செடிகளை அறுவடை செய்து காயவைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.

Related Stories: