கடலூர் மாவட்டத்தில் ஆய்வு அதிகபட்ச சில்லரை விலைக்குமேல் உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து-வேளாண் இயக்குநர் எச்சரிக்கை

கடலூர் : கடலூர் மாவட்ட டெல்டா வட்டாரங்களில், குறுவை பருவத்திற்கான நெல் விதை இருப்பு, மாற்று பயிர் விதை இருப்பு, உரம் இருப்பு தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.கீரப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் வழங்கப்பட உள்ள குறுவை தொகுப்பு திட்டத்திற்கு தேவைப்படும் உரங்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அங்கு ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ள உரங்கள் விவசாயிக்கு சென்றடைந்துள்ளதா என தொடர்புடைய விவசாயிக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உறுதி செய்தார். பின்னர் கீரப்பாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு செய்தார்.தொடர்ந்து சேத்தியாத்தோப்பில் உள்ள தனியார் உரக்கடைகளில் விற்பனை முனைய கருவியில் உள்ள உரயிருப்பு மற்றும் கிடங்கில் உள்ள உர இருப்பை ஒப்பீடு செய்து சரிபார்த்தார். மேலும் உரம் விற்பனை செய்யும்போது நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்தால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார்.

இதை தொடர்ந்து சேத்தியாத்தோப்பு மற்றும் மோவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்தார். காட்டுமன்னார்கோவில் தனியார் உரவிற்பனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், வேளாண்மை துணை இயக்குநர்கள், டெல்டா வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: