சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்வு.: சவரன் ரூ.38,480 -க்கு விற்பனை

சென்னை: இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.144உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த நாட்களில் மிகப் பெரிய அளவில் உச்சம் அடைகிறது. இம்மாத தொடக்கத்திலே தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு அடுத்த நாளே தங்க விலை சவரனுக்கு ரூ.38,336 ஆக அதிகரித்தது.

இதனால் நகை பிரியர்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் 28,29,30 ஆகிய தேதிகளில்  தங்கத்தை விலை எதிர்பாரா வகையில் கடும் இறக்கம் கண்டது.ஒரு கிராம் ரூ.4,800-க்கு குறைவாகவும், ஒரு சவரன் ரூ. 38-க்கு குறைவாகவும் விற்பனையானது. இதனால் நகை பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உறைந்தனர். ஆனால், இதற்கு நேர்மாறாக இம்மாத தொடக்கம் முதல், தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறியது. ஜூலை 1ல் தங்கத்தின் விலை ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கும், ஒரு கிராம் ரூ.4,785-க்கும் விற்பனையானது.

அதற்கு மறுநாளான சனிக்கிழமை சவரன் ரூ.56 உயர்ந்து, ரூ.38,336-க்கும், ஒரு கிராம் ரூ.4,792-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கவிலையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தநிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.144 உயர்ந்துள்ளது. சென்னையில் சவரனுக்கு ரூ.38,480 -க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.4,810-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.64-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.64,000-க்கும் விற்கபட்டு  வருகிறது.

Related Stories: