திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் வரலாறு காணாத கனமழையால் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், மலை பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. கனமழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடரால் அந்த மாநிலத்தின் 23 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. கனமழை காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.