தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு உடைக்கப்பட்டு, மூடி வைக்கப்பட்டுள்ள சட்டமேதை அம்பேத்கரின் சிலையை மீண்டும் திறக்கக்கோரி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. கிராமச்சாவடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை சமூக விரோதிகள் சிலரால் 25 ஆண்டுகளுக்கு முன்பு உடைக்கப்பட்டு தற்போது வரை மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை சீரமைத்து மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாகும். நேற்று சிலர் உடைந்த அம்பேத்கர் சிலையை தன்னிசையாக சீரமைத்து வர்ணம் பூசி, இரும்பு வேலி அமைக்க முயற்சி செய்தனர்.