தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து... தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது திமுக அரசு தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

சென்னை: மொழியை காக்க போராட்டம் நடத்தியது திராவிட இயக்கம் தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை ஆண்டு விழாவில் காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், உலகின் மிக மூத்த மொழிகளில் முதல் மொழியான தமிழுக்கு சொந்தக்காரர்கள் நாம்.ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் தமிழினம், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கைகளில் வாழ்கிறார்கள்.தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும் தமிழ்நாடு தான் தாய் வீடு.உலகம் முழுவதும் பரந்து, விரிந்து வாழும் இனம் தமிழினம். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்.

தமிழ்நாடு என பெயர் சூட்டியது திமுக அரசு தான். ஸ்ரீ என்பதற்கு பதிலாக திரு, ஸ்ரீமதி என்பதற்கு பதிலாக திருமதி என கொண்டு வந்தது திமுக ஆட்சி தான்.தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தது திமுக அரசு. தமிழன் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவன் கண்ணீரை துடைக்க குறிக்கோள் கொண்டுள்ளது திமுக அரசு. ஒரு இனத்தின் அரசாக திமுக அரசு அமையும். திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனத்தின் பெயராக இருந்தது. ஓராண்டாக ஒரு இயக்கத்தின் பெயராக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. திராவிடம் சென்ற சொல்லை திட்டமிட்டு தான் குறிப்பிட்டு வருகிறேன்.

தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது திமுக அரசு தான். எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டிற்கு எதிரான நபர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். இத்தகைய எதிரிகள் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்கிறார்கள். அவர்களை இனங்கண்டு கொள்வோம். தமிழர்களை பிளவுபடுத்தும் கருவியாக மதம் இருப்பதை தான் எதிர்க்கிறோம். சாதியையும், மதத்தையும் தாண்டி மொழியால் இணைக்கும் வல்லமை தமிழுக்கு உண்டு. இறை நம்பிக்கை என்பது அவரவர் உரிமை.தலையிட மாட்டோம், என்றார்.

Related Stories: