குமரி: குமரி மாவட்டத்தில் மீனவர் கிராமங்களில் உள்ள வீடுகள் கடல் மணலில் மூழ்கி வருவதால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் கோவளம் முதல் நீரோடு வரை மீனவ கிராம கடலோர பகுதிகளில் கடல் சீற்றமும், கடல் அரிப்பும் ஏற்படும். இதனால் ராஜக்காமங்களதுறை, அழிக்கால்வல்லவிளை உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களுக்குள், கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது.