ஊத்துக்கோட்டை : பெரியபாளையம் அருகே ஆரணி நடுகுப்பத்தை சேர்ந்தவர் செல்வம் ( 68) . மண்பாண்ட தொழிலாளியான இவரும் இவரது மனைவியும் அருகில் உள்ள பெரியபாளையம் பவானியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் சென்று அங்கு இரவு தங்கி நேற்று காலை அம்மனை தரிசனம் செய்து விட்டு நடுகுப்பத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பி
னர். வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.