திருவள்ளூர்: தமிழக முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.124 கோடி மதிப்பீட்டில் இரு வழிச்சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக முதல்வரின் சாலை விரிவாக்கத்திட்டத்தின் கீழ் ரூ. 124 கோடி மதிப்பீட்டில், திருவள்ளூர் கோட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் - கீழச்சேரி மாநில நெடுஞ்சாலை, மணவாளநகர் - மேல்நல்லாத்துார் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. சிங்கபெருமாள்கோவில் - ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் மணவாளநகர் - மேல்நல்லாத்துார் வரை உள்ள நெடுஞ்சாலை 57 ல், ரூ. 43 கோடி மதிப்பீட்டில் இரு வழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி துவங்கியது. திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.