புதுடெல்லி: நேபாளத்துக்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கி உள்ளது. இந்தியா இந்தாண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா-நேபாளம் இடையிலான வலுவான, நீண்டகால நட்புறவை வலுப்படுத்தும் விதமாக, நேபாளத்துக்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கி உள்ளது. இதற்கான சாவிகளை நேபாளத்துக்கான இந்தியாவின் புதிய தூதர் நவீன் வஸ்தவா, நேபாள கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தேவேந்திர பவுடல் முன்னிலையில் காத்மாண்டுவில் நேற்று வழங்கினார்.