சிறுமிக்கு பாலியல் தொல்லை: தூய்மை பணியாளருக்கு வலை

தண்டையார்பேட்டை: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சென்னையை புறநகரை சேர்ந்த 49 வயதுடைய பெண் கிட்னி பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு சேர்ந்தார். இவருக்கு உதவியாக இவருடைய 13 வயது மகள் உடன் இருந்தாள். கடந்த 30ம் தேதி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணிபுரியும் பழனி என்பவர் சிறுமி இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், சிறுமி கூச்சல் போட்டு மருத்துவமனை செவிலியரிடம் கூறினாள். அதைத் தொடர்ந்து பழனி தலைமறைவானார். இதுகுறித்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள புற காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், தலைமறைவாக உள்ள பழனியை போலீசார் தேடி வருகின்றனர். கிட்னி பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் சாலையில் அமர்ந்து பிச்சை எடுத்து குடும்பம்  நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: