பகுதி நேர பி.இ. படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பகுதி நேர பிஇ பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2022-23ம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பிஇ பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவை முறையே அரசினர் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 013, அரசினர் பொறியியற் கல்லூரி சேலம் - 636 011, அரசினர் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி - 627 007, அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, காரைக்குடி - 630 004, தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, வேலூர் - 632 002, அரசினர் பொறியியல் கல்லூரி, பர்கூர் - 635 104, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் - 641 014, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை - 625 015.

இதற்கான தகுதி, விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப்படிப்பு முடித்து, 2 ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது 2 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். இதற்கான ஆன்லைன் மூலமாக இன்று துவங்கி வரும் 3.8.2022ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (டிஎப்சி) மையத்தினை பயன்படுத்தி கொள்ளலாம்.  இந்த கல்வியாண்டில் பகுதிநேர பிஇ பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும். விவரங்கள் அறிய www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும், 0422-2590080, 9486977757 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: