திசையன்விளை: நெல்லை மாவட்டம், உவரி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட மனைவியின் நகையை திருடிய கோழிப்பண்ணை உரிமையாளரை போலீசார் எச்சரித்தனர். நெல்லை மாவட்டம், உவரி அருகே கரைச்சுத்துப்புதூரை சேர்ந்தவர் அந்தோனி பாபு ஜார்ஜ். குத்தகைக்கு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜார்ஜ் இருதய செல்வசோபனா(36). இவர் நேற்று முன்தினம் இரவு வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்டு பீரோவில் பூட்டி சாவியை வழக்கம் போல் வைக்கும் இடத்தில் வைத்தார். நேற்று மதியம் வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த போது ஒருவர் பிச்சை கேட்டு வந்துள்ளார். அவர் சென்ற பின் துணியை எடுப்பதற்கு பீரோவை திறந்தபோது அதிலிருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை காணவில்லை. இதுபற்றி ஜார்ஜ் இருதய செல்வசோபனா, உவரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.