சென்னை: கோயில் கட்டிடங்கள், நிலங்களுக்கு ரூ. 5 லட்சம் வரை ஏலம் விட இணை ஆணையருக்கு அதிகாரம் வழங்கி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்து சமய அறநிலைய கொடைகள் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை இணை ஆணையர்களுக்கு பகிர்ந்து வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்து சமய அறநிலையத்தின் பிரிவு 116ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட அறநிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்கள் குத்தகைக்கு விடுதல், விதிகளின்படி குத்தகைக்கு விடப்பட்டன. இனங்களை அங்கீகரிப்பது குறித்து இணை ஆணையர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்படுகிறது.