கேசினோ சந்திப்பு சாலையில் விதிமீறி வாகனங்கள் நிறுத்துவதால் நெரிசல்; காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊட்டி: கேசினோ சந்திப்பு முதல் டிபிஓ சந்திப்பு வரை சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கேசினோ சந்திப்பு முதல், டிபிஓ சந்திப்பு வரையுள்ள சாலையில் இரு புறங்களிலும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இதனால், வாகனங்கள் ஒன்றிற்கு ஒன்று இடம்விட்டு செல்ல முடியாமல் வெகு நேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. எனவே, இச்சாலையில் ஏதேனும் ஒரு புறம் மட்டும் வாகனங்களை நிறுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் காவலர்களை நியமித்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: