சென்னை: தபால் துறை ஊழியர்கள் மூலம் கடந்த 1ம் தேதி மட்டும் 1,837 ஓய்வூதியதாரர்களின் இருப்பிடத்திற்கு சென்று இணையதள வாழ்நாள் சான்று பதிவு செய்து நேர்காணல் செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் கடந்த 1ம் தேதி முதல் துவங்கப்பட்டது. ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கு சென்று இணையதள மின்னணு வாழ்நாள் சான்று வழங்கும் சேவையை இந்திய அஞ்சல் வங்கி தபால்துறை பணியாளர்கள் மூலமாக செய்து வருகிறது. அதன்படி கடந்த 1ம் தேதி மட்டும் 14,760 ஓய்வூதியர்களுக்கு இணையதள வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யப்பட்டுள்ளது.