நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 2,533 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 1,372 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 2,533 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 2,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34 லட்சத்து 80 ஆயிரத்து 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 026 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 13,319 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,372 பேர் ‘டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 34 லட்சத்து 28 ஆயிரத்து 758 பேர் குணம் அடைந்து உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,059 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது.

Related Stories: