சென்னை : பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டுக்கு வந்தவர்களையும் அகதிகளாக அறிவித்து உதவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் 16 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருக்கிறது. பல வாரங்களாக உண்ணாநிலை, போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது!