பா.ம.க.வின் கோரிக்கை முதலமைச்சர் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது : அன்புமணி ட்வீட்

சென்னை : பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டுக்கு வந்தவர்களையும் அகதிகளாக அறிவித்து உதவ அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் 16 பேரை தமிழக அரசு  விடுதலை செய்திருக்கிறது. பல வாரங்களாக உண்ணாநிலை, போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது!

சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்ற அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கடந்த ஜூன் ஒன்றாம் தேதி வலியுறுத்தியிருந்தேன். ! விடுதலை செய்யப்பட்ட அகதிகள் தாயகம் திரும்பவோ, தமிழகத்தில் வாழவோ விரும்பினால் அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டுக்கு வந்தவர்களையும் அகதிகளாக அறிவித்து உதவ அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: