கைதி மாயம்: சேலம் சிறை அதிகாரியிடம் 3 மணி நேரம் விசாரணை

சேலம்: சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஹரி. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 3 நாள் பரோலில் சென்ற கைதி ஹரி, கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிறைக்குள் வந்திருக்க வேண்டும்.

ஆனால் சிறை வாசலில் அவரை  வார்டன் ராமகிருஷ்ணன், டூவீலரில் அவரை ஏற்றிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இது தொடர்பாக கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், சிறை  அலுவலக கண்காணிப்பாளர் சங்கர்பாலிடம் 3  மணி நேரம் விசாரணை நடத்தினார்.

Related Stories: