சின்னாளபட்டி: அதிமுக ஆட்சியில் தமிழக கூட்டுறவுத்துறையில் ரூ.780 கோடியளவில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சீவல்சரகு ஊராட்சி சுதனாகியபுரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தமிழக கூட்டுறவுத்துறையில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தோராயமாக ரூ.780 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சட்டக்குழுவும், மூத்த வக்கீல்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறை மோசடி குறித்து பல வழக்குகள் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை.