மும்பை: முடக்கப்பட்ட தனது பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்குமாறு ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (24) கடந்தாண்டு அக்டோபர் தொடக்கத்தில், சொகுசு கப்பலில் சென்றபோது போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது பாஸ்போர்ட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கிட்டத்திட்ட 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன்கான், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.