கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி, ரபீந்திர பாரதி பல்கலைக் கழகத்துக்கு புதிய துணைவேந்தரை ஆளுநர் நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜெகதீப் தன்காருக்கும் பல்வேறு விஷயங்களில் மோதல் நிலவி வருகிறது. இதனால், ஆளுநரை மட்டம் தட்டும் வகையில், அவரிடம் இருந்த பல்கலைக் கழக வேந்தர் பதவியை, சட்டப்பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றிய சிறப்பு தீர்மானத்தின் மூலம் மம்தா பறித்தார். ஆளுநருக்கு பதிலாக அவரே இந்த தீர்மானத்தின் மூலம் வேந்தரானார்.