செங்கல்பட்டு: செங்கல்பட்டு தட்டார்மலைத்தெரு பகுதியை சேர்ந்தவர் காஜாஷெரீப். இவரது, மகன் உசேன்பாஷா (28). இவர், வேலைக்கு செல்லாமல் வழிப்பறி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என ஈடுபட்டு அதில், கிடைக்கும் பணத்தில் தனது கூட்டாளிகளுடன் கஞ்சா போதையில் இருந்து வந்தார். உசேன்பாஷா மீது செங்கல்பட்டு டவுன் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த வருடம் மதுராந்தகம் பெட்ரோல் பங்க் காவலாளியை கொலை செய்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி ஒரு வருடமாக சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்துவிட்டு கடந்த 10 தினங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியில் வந்தார்.