கோயில் சொத்துக்களின் வருவாயை முறையாக வசூலித்தல், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும்: ஐகோர்ட் கருத்து

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மூலம் வரும் வருவாயை முறையாக வசூலித்தல் தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கோயில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் 75-க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவற்றில் 38 உத்தரவுகளை அமல்படுத்திவிட்டதாகவும் 5 உத்தரவுகள் மாநில அரசு தொடர்பில்லாதது என்றும், 32 உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் வழக்கறிஞர் அருண் நடராஜ் ஆஜரானார். அவர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பழமையான கோயில்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான பணியை கோயில்களின் செயல் அலுவலர்கள், பொதுப்பணித்துறையினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரண்டு துறை அதிகாரிகளும் கோயில்கள் புனரமைப்பிற்காக மாவட்டம் மற்றும் மாநில குழுக்களின் ஆலோசனை படி செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஒருகால பூஜை நடைபெறும் கோயில்களுக்கான நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கோயில்களின் கணக்குகளை தணிக்கை செய்ய தமிழக தணிக்கை துறை தலைவர் தலைமையில் 5 நபர்கள் கொண்ட குழுவை அமைத்து அரசாணை  வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான 5,82,039 ஏக்கர் நிலங்களில் 3,79,000 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் விவரங்கள் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள நிலங்களை கண்டறியும் பணி நடைபெற்றுவருவதாகவும், நாளொன்றுக்கு 2,000 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோயில்களில் ஸ்டராங் ரூம்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஏற்கனவே கட்டப்பட்டு விட்டதாகவும் அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் நடராஜன் தெரிவித்தார். எனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பெரும்பாலாவை நிறைவேற்றப்பட்டு வருவதாகும், சிலவற்றை மறுஆய்வு செய்யக்கோரும் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

Related Stories: