பழநி: பழநியில் டூவீலரில் செல்லும் வாலிபர்கள் நாயை தொங்க விட்டபடி டார்ச்சர் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி நகரில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதில் பழநி காந்தி மார்க்கெட் பகுதியில் டூவீலரில் 2 வாலிபர்கள் செல்கின்றனர். பின்னால் அமர்ந்திருக்கும் வாலிபர், நாய் ஒன்றை தலைகீழாக தொங்க விட்டபடி பிடித்து செல்கிறார். மேலும், நாயை அங்குமிங்கும் வீசியபடி பெரியகடை வீதி வரை செல்கின்றனர்.