மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை மஞ்சள் ஆற்றங்கரையில் புகழ்பெற்ற வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சில மாதங்களுக்கு முன் 24 கிலோ எடை உள்ள வெண்கல ஐயப்பன் சுவாமி சிலை, கடந்த டிசம்பர் மாதம் சிவராமபுரம் அக்ரஹாரத்தில் உள்ள ராகவேந்திரா ஆசிரமத்தில் 23 கிலோ எடை உள்ள 2 வெண்கல சிலைகள் திருட்டு போனது. இதுகுறித்து குத்தாலம் போலீசில் அளித்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.