சென்னை: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொரோனா பாதிப்பு, தமிழகத்தில் 5%-க்கும் கீழ் குறைவாகவே உள்ளது என்றும், பிற மாநிலங்களை விலை தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைவாக உள்ளது குறித்தும், தொற்று பரவல் உச்சம் பெற்று தான் குறையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த கருத்து குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.