மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய சிவசேனா

டெல்லி: மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சட்டபேரவைக்குள் நுழைய விதிக்கக் கோரி, மகா விகாஸ் கூட்டணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஜூலை 12ம் தேதி வரை அவகாசம் அளித்ததை அடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அதிருப்தி முகாமின் தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து மராட்டியத்தில் ஆட்சி அமைத்து உள்ளார்.

இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவையில் நுழைய அனுமதிக்கக்கூடாது என மகா விகாஸ் கூட்டணி தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது. தகுதிநீக்க வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்கக்கூடாது என முறையிடப்பட்டுள்ளது. சிவசேனா தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வழக்கை விரைவாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வாதிட்டார். என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துள்ளோம். ஜூலை 11ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

Related Stories: