சென்னை: பாஜக நிர்வாகி கல்யாணராமனுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்யாணராமனுக்கு எதிரான வழக்கை விரைந்து முடிக்கக் கோரி விசிக பிரமுகர் கோபிநாத் வழக்கு தொடர்ந்துள்ளார். வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருவதாக கல்யாணராமன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.