டெல்லி: இந்தியாவின் வெளிநாட்டு கடன் 49 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் நடப்பாண்டில் குறுகிய கால வெளிநாட்டு கடன் 20 விழுக்காடு அதிகரித்து 9 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நீண்ட கால கடன் 5.6 விழுக்காடு அதிகரித்து 39 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.