பொன்னேரி: மீஞ்சூர் பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிந்த பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, பேரூராட்சிகளின் இயக்குனர் அறிவுரைப்படி, நேற்று மாலை மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உதவி இயக்குனர் கண்ணன் தலைமையில் செயல் அலுவலர் வெற்றி அரசு, இளநிலை உதவியாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் ஆனந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.