ஆதிச்சநல்லூர்:ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்த இடத்திலேயே அருங்காட்சியம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அருங்காட்சியம் அமைக்க இடம் தேர்வு செய்வது அரசின் கொள்கை முடிவு என்றும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.