கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் கறம்பக்குடி பேருந்தில் இருந்து வெள்ளாளவிடுதி, வேலாடிப்பட்டி, கொல்லம்பட்டி, மருங்கூரணி, சுந்தம்பட்டி, புதுப்பட்டி, காட்டு நாவல் ஆகிய ஊர்களிலிருந்தும் கந்தர்வகோட்டை நகர் பகுதியான காமராஜ் நகர், தென்றல் நகர், பெரியார் நகர், தெற்கு செட்டி தெரு ஆகிய பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் தினசரி பள்ளிக்கு செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.