சென்னை: தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். நீட் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே தற்கொலை நிகழ்வுகள் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வால் தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டதை தனித்த ஒன்றாக பார்க்க கூடாது என அவர் கூறியுள்ளார்.