சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்வு.: சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை

சென்னை: இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.856 உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த நாட்களில் மிகப் பெரிய அளவில் உச்சம் அடைகிறது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, சவரன் ரூ.38,080-க்கு விற்பனையானது. இது வாடிக்கையாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் அதற்கு அடுத்த நாளே தங்க விலை சவரனுக்கு ரூ.38,160 ஆக அதிகரித்தது. இதனால் நகை பிரியர்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், 28-ம் தேதி ஒரு கிராம் ரூ.4,765-க்கும், ஒரு சவரன் ரூ. 38120-க்கும் விற்பனையானது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.இதனையடுத்து 29-ம் தேதி ஒரு கிராம் ரூ.4,683-க்கும், ஒரு சவரன் ரூ.37,464-க்கும் விற்பனையானது. ஆனால் நேற்று 30-ம் தேதி ஒரு கிராம் ரூ.4,678-க்கும், ஒரு சவரன் ரூ.3,7424-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. ரூ.856 உயர்ந்துள்ளது. சென்னையில் சவரனுக்கு ரூ.38,280 -க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராம் ரூ.4,785-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.65,000-க்கும் விற்கபட்டு  வருகிறது.

Related Stories: